அமெரிக்காவில் வீட்டை விற்பவர்கள் வீட்டை விற்பதற்கு எது வேண்டுமானாலும் செய்ய தயாராகி வருகின்றனர். செயின்ட் ஜோசப் சிலையை வீட்டின் முகப்புறத்தில் புதைத்தால் வீடு சீக்கிரம் விற்று விடும் என்று சிலர் புரளி கிளப்பி விட்டதால் இன்று செயின்ட் ஜோசப்பின் சிலைகளுக்கு demand அதிகமாகி விட்டது. Stjosephstatue.com என்ற வலைத்தளமும் உருவாகி விட்டது. 
அமெரிக்கர்களுக்கு கூட மூட நம்பிக்கை உள்ளதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். மனதில் பயம் வரும் போது மனம் எதையும் நம்பும்!
தொடர்புள்ள இணைப்பு: Home sellers seek help from saint
Saturday, April 18, 2009
சாமியார் சிலையை புதைத்தால் வீடு விற்குமா?
Posted by
Bharathi
at
10:24 PM
7
comments
Labels: ரியல் எஸ்டேட்
கலிகாலம்
அமெரிக்காவில் சிறு பெண்களையும் பையன்களையும் கடத்தி கற்பழிக்கும் கொடுமை பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இது வரை இந்த கொடுமைகளை செய்தவர்கள் ஆண்கள். These guys were sick bastards. இவர்களின் வரிசையில் ஒரு பெண்ணும் சேர்ந்திருக்கிறாள். தன் எட்டு வயது குழந்தையின் தோழியை கொலை செய்யும் அளவுக்கு இந்த பெண்மணியின் பித்தம் கலங்கி விட்டது.
இனிமேல் பெற்றோர்கள் யாருக்கெல்லாம் பயப்பட வேண்டும் என்று தெரியவில்லை.
தொடர்புள்ள இணைப்புகள்: Private funeral for 8 year old girl found in suitcase | Mercury news editorial
Posted by
Bharathi
at
9:52 AM
1 comments
Labels: செய்தி விமர்சனம்
Tuesday, April 14, 2009
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ் புத்தாண்டு/சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!
சில தினங்களுக்கு முன்னால் வெல்ஸ் ஃபார்கோ வங்கி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நேற்று Goldman Sachs இந்த வருட முதல் காலாண்டில் நல்ல லாபம் கிடைத்ததாக கூறியது. இன்று அதன் பங்குகள் கீழே விழுந்தாலும் மற்ற வங்கிகளின் பங்குகளை வாங்குவதை விட கோல்ட்மேன் பங்குகளை வாங்குவது பெட்டராக தெரிகிறது.
சூதாட்டத்தில் பிரியமிருந்தால், சிட்டிபேங்க் பங்குகளை இன்று $4க்கு வாங்கி வரும் வியாழன் சந்தை மூடும் முன்பு விற்றால் லாபம் பார்க்கலாம். சிட்டிபேங்க் ஏப்ரல் 17 அன்று தன் லாப கணக்குகளை அறிவிக்கிறது.
இன்னும் சில மாதங்களுக்கு நீண்ட கால முதலீட்டு தத்துவத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு தான் சந்தையில் விளையாட முடியும் போலிருக்கிறது. அடுத்த வாரமே நிலைமை தலைகீழாக மாறலாம்.
Posted by
Bharathi
at
10:23 AM
0
comments
Labels: எண்ணங்கள், பங்கு சந்தை
Tuesday, April 07, 2009
நீதிபதியை துரத்திப் பிடித்த நீதி
77 டாலர் அபராதத்தை தவிர்க்க ஒரு பொய் சொல்லி இன்று இரண்டு வருடம் சிறை தண்டணை அனுபவிக்கிறார் மார்கஸ். இவர் ஆஸ்திரேலியாவில் மத்திய நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவர். ஆஸ்திரேலிய மனித உரிமை கழகத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். நேஷனல் ட்ரஸ்ட் ஆப் ஆஸ்திரேலியா இவரை "தேசத்தின் பொக்கிஷம்" என்று புகழ்ந்திருக்கிறது.
ஒரு சிறு தவறால் வாழ்க்கையே தலைகீழாக போவதற்கு திரு. மார்கஸ் ஒரு உதாரணம். இவர் தனது காரில் 10 கி.மீ. அதிக வேகத்தில் போனதை ட்ராபிக் கேமரா புகைப்படம் எடுத்து விட்டது. தனது தவறை ஒத்துக் கொண்டு 77 டாலர் அபராதம் கட்டியிருக்கலாம். அதில்லாமல், தனது காரை தோழி ஒருவர் அன்று எடுத்துக் கொண்டு போனதாக பொய் சொல்லி விட்டார். இதைப்பற்றி ஒரு பத்திரிகை நிருபர் விசாரிக்கும் போது அந்த தோழி மூன்று வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதாக தெரிய வந்தது. அங்கே ஆரம்பித்த சர்ச்சை முன்னாள் நீதிபதியை இன்னாள் சிறைக்கைதியாக மாற்றி விட்டது.
தமிழ்நாட்டில் பல கொலைகள் செய்தவர்களுக்கு கூட மாலையும் மரியாதையும் உயர்ந்த பதவிகளும் தேடி வருகின்றன. ஒரு பொய் சொன்னதால் முன்னாள் நீதிபதியாக இருந்தாலும் பரவாயில்லை என்று சிறைத் தண்டனை கொடுத்திருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவில். நீதி தேவதை உலகத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் செல்கிறார் போலிருக்கிறது.
தொடர்புள்ள இணைப்பு: Jail completes Marcus Einfeld's fall
Posted by
Bharathi
at
5:13 AM
4
comments
Labels: செய்தி விமர்சனம்
