தமிழ் புத்தாண்டு/சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!
சில தினங்களுக்கு முன்னால் வெல்ஸ் ஃபார்கோ வங்கி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நேற்று Goldman Sachs இந்த வருட முதல் காலாண்டில் நல்ல லாபம் கிடைத்ததாக கூறியது. இன்று அதன் பங்குகள் கீழே விழுந்தாலும் மற்ற வங்கிகளின் பங்குகளை வாங்குவதை விட கோல்ட்மேன் பங்குகளை வாங்குவது பெட்டராக தெரிகிறது.
சூதாட்டத்தில் பிரியமிருந்தால், சிட்டிபேங்க் பங்குகளை இன்று $4க்கு வாங்கி வரும் வியாழன் சந்தை மூடும் முன்பு விற்றால் லாபம் பார்க்கலாம். சிட்டிபேங்க் ஏப்ரல் 17 அன்று தன் லாப கணக்குகளை அறிவிக்கிறது.
இன்னும் சில மாதங்களுக்கு நீண்ட கால முதலீட்டு தத்துவத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு தான் சந்தையில் விளையாட முடியும் போலிருக்கிறது. அடுத்த வாரமே நிலைமை தலைகீழாக மாறலாம்.
Tuesday, April 14, 2009
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Posted by
Bharathi
at
10:23 AM
Labels: எண்ணங்கள், பங்கு சந்தை
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment