இன்னும் பல மாதங்களுக்கு!
செப்டம்பர் 15, 2008 அன்று எழுதிய பதிவில் "இந்த கலாட்டாவில் பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியும் lehman brothers போல திவாலானால் கூட ஆச்சரியப்பட மாட்டேன்." என்று எழுதியிருந்தேன். 46 பில்லியன் டாலர்களுக்கு மெரில் லிஞ்ச் நிறுவனத்தை வாங்கிய பேங்க் ஆஃப் அமெரிக்கா வங்கியின் இன்றைய மொத்த மார்க்கெட் மதிப்பு வெறும் 31 பில்லியன் டாலர்கள் தான். பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குகள் ஐந்து டாலருக்கு விற்கும் நிலைமை வந்து விட்டது. மெரில் லிஞ்ச் நிறுவனத்தை விற்றவர்கள் புத்திசாலிகள். பல பில்லியன் டாலர்கள் நஷ்டம் வரும் என்பதை முன்பே அறிந்து சாமர்த்தியமாக பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குதாரர்கள் தலையில் நஷ்டத்தைக் கட்டிவிட்டு போய் விட்டார்கள். 
இன்றைய தேதியில் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை அதிகாரியின் (Ken Lewis) வேலைக்கே உத்தரவாதம் கிடையாது. தன் பெயர் கெட்டு விட்டதால் ஆத்திரமாகி நேற்று மெரில் லிஞ்சின் ஜான் தெய்னை (John Thain) வேலையை விட்டு பேங்க் ஆஃப் அமெரிக்காவின் கென் லூயிஸ் நீக்கி விட்டார். இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.
மெரில் லிஞ்சின் ஜான் தெய்ன் போன வருடம் தன் நிறுவனத்தில் அனைவரையும் செலவுகளை குறைக்க சொல்லிவிட்டு தனது ஆபிஸ் ரூமை புதுப்பிப்பதற்கு $800,000 செலவு செய்திருக்கிறார். தரைக்கம்பளத்திற்கு மட்டும் $87,000! Tyco நிறுவனத்தின் முந்தைய தலைமை அதிகாரி Dennis Kozlowski குளியலறை திரைக்கு $6,000 செலவு செய்த கதையாக இருக்கிறது.
தனது நிறுவன mission statementகளில் மட்டும் பங்குதாரர்களுக்காக தான் நாங்கள் உயிர் வாழ்கிறோம் என்று ரீல் சுத்தி விட்டு பங்குதாரர்களின் பணத்தை இப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள்.
பல அமெரிக்க வங்கிகளின் பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கின்றன. இன்னும் என்னவெல்லாம் பூதம் கிளம்புமோ என்ற பயம் தான். பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்ற வங்கிகளே அரசாங்கத்திடம் பல பில்லியன் டாலர் bailout கேட்கும் போது இது மிக மிக சிரமமான காலம் தான்.
பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க் போன்ற வங்கிகள் ஒரு நாள் 50% விழுகின்றன. அடுத்த நாள் 30% ஏறுகின்றன. "வங்கிகள் விலை அதிகமாக கீழே விழும்போது வாங்கி அடுத்த நாள் 10% ஏறினாலே சூப்பராக லாபம் சம்பாதிக்கலாம்" என்று என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் கடந்த மூன்று நாட்களாக சூதாட்டம் விளையாடுகிறார். இந்த வங்கியின் கடந்த சில தினங்களின் சார்ட்டை இங்கு பார்க்கலாம். பங்குகளின் விலை 30% உயரும் போது செக்ஸியாக தான் இருக்கும். சத்யம் பங்குகள் கூட இன்று 59% உயர்ந்தன. அவற்றை 25 டாலருக்கு வாங்கியவர்களுக்கு தான் அதன் வேதனை புரியும்.
இது போன்ற day trading விளையாட்டுக்கெல்லாம் நான் போவதில்லை. 12 வருடங்களுக்கு முன்னால் இதெல்லாம் விளையாடியிருக்கிறேன். ஒரு நாள் லாபம் வரும். அடுத்த மூன்று நாட்கள் நஷ்டம் வரும். கூட்டி கழித்து பார்த்தால் நஷ்டமும் வேதனையும் தான் மிச்சம்.
இன்று $6க்கு விற்கும் பங்கை வாங்கி அதில் 20% லாபம் கிடைத்து $7.20க்கு விற்றால் சந்தோஷம் தான். ஆனால் 20% நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்டுவதற்கு 20 சதவிகிதத்தை விட கூட லாபம் சம்பாதிக்க வேண்டும்.
உதாரணம்: $80க்கு ஆப்பிள் நிறுவனத்தை வாங்கி பங்குகள் விலை சரிந்து $64க்கு விற்றால் எனக்கு 20% நஷ்டம். திரும்பவும் ஆப்பிள் பங்குகள் $80க்கு வருவதற்கு பங்குகள் 20% விலை உயர்ந்தால் போதாது. 25% விலை உயர்ந்தால் தான் $80க்கு வரும்.
இன்று $6க்கு விற்கும் வங்கிகளின் நீண்டகால பங்குதாரராக இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் அவற்றின் பங்குகளை வாங்கலாம். எந்த வங்கியின் பங்குகளும் என்னிடமில்லை. இன்னும் பல மாதங்களுக்கு வாங்குவதாக எண்ணமுமில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு அதில் பங்கு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வந்தால் தான் பங்கு சந்தைகள் உயரும். அதற்குள் இன்னும் எத்தனை வங்கிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களிடம் உதவி கேட்குமோ தெரியவில்லை.
தொடர்புள்ள இணைப்புகள்: Britain Unveils Second Bank Bailout | Volatility still reigns | Caution: Banking Stocks Ahead | Fear Factor
Friday, January 23, 2009
பங்கு சந்தைகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு தள்ளாடும்?
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
/
பங்குகளின் விலை 30% உயரும் போது செக்ஸியாக தான் இருக்கும். சத்யம் பங்குகள் கூட இன்று 59% உயர்ந்தன. அவற்றை 25 டாலருக்கு வாங்கியவர்களுக்கு தான் அதன் வேதனை புரியும்.
/
ரொம்ப சரி
/
இது போன்ற day trading விளையாட்டுக்கெல்லாம் நான் போவதில்லை. 12 வருடங்களுக்கு முன்னால் இதெல்லாம் விளையாடியிருக்கிறேன். ஒரு நாள் லாபம் வரும். அடுத்த மூன்று நாட்கள் நஷ்டம் வரும். கூட்டி கழித்து பார்த்தால் நஷ்டமும் வேதனையும் தான் மிச்சம்.
/
கண்டிப்பாக
வணக்கம் சிவா. நன்றி!
Post a Comment