அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் பொருளாதார பிரச்னையில் வேலை இழந்து இந்தியா செல்லும் NRI-களுக்கு இன்னொரு அதிர்ச்சி இந்தியாவில் காத்திருக்கிறது. இந்திய ப்ராவிடன்ட் ஃபண்ட் செய்த சில விதிமுறை மாற்றங்களால் NRI-களை வேலையில் சேர்ப்பது பல நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை கொடுக்கிறது. இதனால் NRI-களை வேலைக்கு எடுப்பது கணிசமாக குறையும் என்று Economic Times கணித்திருக்கிறது. புது விதிமுறைகளால் வெளி நாடுகளில் On-site-ல் வேலை செய்யும் இந்திய ஊழியர்களும் பாதிக்கப்படலாம். இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.
Tuesday, December 23, 2008
Monday, December 22, 2008
அரசியல் அடிதடி
நம் ஊரில் மட்டும் தான் அரசியல்வாதிகள் கைகலப்பிலும், சேலை வேட்டிகளை உருவுவதிலும் தீவிர நாட்டம் காட்டுவார்கள் என்று நினைத்திருந்தேன். தெற்கு கொரியாவின் அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை சமீபத்தில் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.
கத்தி, அரிவாள் என்று எதுவும் தூக்காமல் தீயணைப்பு குழாயை உபயோகித்து மல்யுத்தம் நடத்தியிருக்கிறார்கள். தீயணைப்பு நுரையில் சிக்கித்தவிக்கும் சில அரசியல்வாதிகளை கீழ் படத்தில் காணலாம்.
இது பற்றிய அதிக விபரங்கள் இங்கே.
Wednesday, December 17, 2008
பூஜ்யத்தில் ஒரு ராஜ்ஜியம்
அமெரிக்க மத்திய வங்கி தடாலடியாக வட்டி விகிதத்தை பூஜ்யத்துக்கு கொண்டு வந்து விட்டது.
ஜப்பானில் பல வருடங்களுக்கு முன்பே பூஜ்ய வட்டி விகிதம் கொண்டு வந்தும் அதன் பொருளாதாரம் இப்போது கூட பிரகாசமாக இல்லை. பூஜ்ய வட்டி விகிதம் மட்டும் அமெரிக்க பொருளாதாரத்தை காப்பாற்றப் போவதில்லை.
நீங்கள் அமெரிக்காவில் வாழ்பவராக இருந்தால், குறைந்த வட்டி விகிதத்தை பயன்படுத்தி உங்கள் வீட்டு கடன் வட்டியை குறைக்கலாம். கிரடிட் கார்டு மற்றும் பிற கடன்களையும் குறைந்த வட்டிக்கு மாற்றலாம்.
வட்டி விகிதம் குறைந்ததால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும். இந்தியாவிற்கு இன்னும் சில வாரங்களில் பணம் அனுப்புவதாக திட்டமிருந்தால் அந்த டாலர்களை இப்போதே அனுப்புவது நல்லது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதால் தங்கத்தின் விலை உயரலாம்.
பூஜ்யத்தை கொடுத்து Dow Jones குறியீட்டை 359 புள்ளி உயர்த்தியிருக்கிறார்கள். ஆனாலும் பங்கு சந்தையில் இன்னும் பயம் போக வில்லை. பல வங்கிகளின் ஆராய்ச்சியாளர்கள் வட்டி விகிதம் பூஜ்யத்துக்கு போகும் அளவுக்கு வேறு என்ன உட்பிரச்னையாக இருக்கும் என்று அலச ஆரம்பித்திருக்கிறார்கள். அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் கொடுத்த பூஜ்யத்தை வைத்துக்கொண்டு இன்னும் இரண்டு வாரங்கள் பங்குச்சந்தை உயரலாம். கிறிஸ்துமஸ் தாத்தா (Santa Claus) வரும் நேரத்தில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மனோதத்துவ ரீதியில் ஒரு boost கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பூஜ்ய மருந்து டிசம்பருக்கு பிறகும் வேலை செய்யுமா என்பது சந்தேகம் தான்.
தொடர்புள்ள இணைப்புகள்: Effects of Zero Interest Rate | Fed cuts interest rates to virtually zero
Posted by
Bharathi
at
1:35 AM
6
comments
Labels: கடன், கிரடிட் கார்டு, சேமிப்பு, பங்கு சந்தை, பொருளாதாரம்
Tuesday, December 09, 2008
மும்பை தாக்குதல் - பாகிஸ்தான் ஜனாதிபதியின் கட்டுரை
நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் "opinion" பகுதியில் நேற்று பாகிஸ்தான் ஜனாதிபதி அசிப் அலி ஜர்தாரி மும்பை தாக்குதலைப் பற்றியும் தீவிரவாதிகளை அழிப்பது பற்றியும் தன் கருத்துகளை விரிவாக எழுதியிருக்கிறார். அவசியம் படித்து பாருங்கள்.
தீவிரவாதிகள் திட்டமிட்ட படுகுழியில் விழுந்து இந்தியாவும் பாகிஸ்தானும் அணுகுண்டு யுத்தத்தில் பல உயிர்களை இழந்தால் தீவிரவாதிகளுக்கு தான் லாபம். ஆனாலும், அசிப் அலி ஜர்தாரி இதே மும்முரத்தில் இருந்து தீவிரவாதிகளை அழித்துவிட்டு காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு நிரந்தர முடிவு கண்டால தான் இரு நாடுகளும் நிம்மதியாக இருக்க முடியும்.
இது வரை இருந்த பாகிஸ்தான் அரசியல்வாதிகளில் ஜர்தாரி தீவிரவாதிகள் விஷயத்தில் நேர்மையான அக்கறை காட்டுவது போல தெரிகிறது. அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கையும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். பாகிஸ்தானில் உள்ள குயுக்தி ராணுவ அதிகாரிகள் உஷாராகி தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்குள் ஜர்தாரி ஜரூராக தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் தீயில் போட்டால நல்லது.
Monday, December 08, 2008
மும்பை தாக்குதலினால் சிதைந்த பொருளாதாரம்
மும்பை தாக்குதலினால் பலியான பல உயிர்களோடு இந்திய பொருளாதாரமும் சிதைக்கப்பட்டதோ என்ற பயம் ஏற்படுகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை தள்ளிப் போட்டிருக்கின்றன. நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கு, முக்கியமாக மும்பைக்கு, செல்லக்கூடாது என்று பல வெளிநாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன.
இவை அனைத்துக்கும் மேலாக இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் முதலீடு செய்வதை விட சீனாவில் முதலீடு செய்வது நல்லது என்று ஜாக் வெல்ச் போன்றவர்கள் கூட சொல்வது கவலைக்குரிய விஷயம்.
மும்பை தாக்குதலை இந்திய அரசாங்கமும் மகாராஷ்டிர அரசாங்கமும் கையாண்ட விதம், இந்தியாவின் தற்காப்பு திறமையைப் பற்றிய மோசமான இமேஜை உலகத்துக்கு கொடுத்திருக்கின்றது. ஆரம்ப தினங்களில் அரசியல்வாதிகள் முட்டாள்தனமாக நிலைமையை கையாண்டாலும், மக்களின் கொதிப்பை பார்த்து திரைமறைவில் பாகிஸ்தானை படிய வைக்க முயற்சி செய்கின்றது. அதன் விளைவால் Zaki-ur-Rehman Lakhvi போன்ற தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஒப்படைக்குமா அல்லது நாம்கே வாஸ் விசாரணை நடத்தி விடுதலை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
எது எப்படி இருந்தாலும், மும்பை தாக்குதல் மக்களிடம் ஒரு புரட்சியை உருவாக்கியிருக்கிறது. இது வரை "adjust karo" என்ற எண்ணத்தால் வாழ்ந்தவர்கள் "பொறுத்தது போதும்" என்று பொங்கி எழுந்திருப்பது இந்தியாவின் திருப்புமுனையாக இருக்கும். அது பொறுப்பில்லாத அரசியல்வாதிகளுக்கு சாவு மணியாகவும் இருக்கும்.
இந்த பதிவுக்கு தொடர்புள்ள புத்தகம்: The Tipping Point by Malcolm Gladwell. இந்தியாவில் இந்த புத்தகம் குறைந்த விலைக்கு கிடைக்கலாம். நேரம் கிடைத்தால் அவசியம் படியுங்கள். சில திருப்புமுனைகளால் சரித்திரங்கள் திருத்தி எழுதப்படுவதை அருமையாக விளக்கும் புத்தகம் இது.
