தலைப்பை கேட்பதற்கு தங்கர் பச்சான் படத்தலைப்பை போல இருந்தாலும் இன்று Palm Desert, கலிபோர்னியாவில் அது தான் நடந்திருக்கின்றது.
Toys-R-Us கடைக்குள் இரு பெண்மணிக்குள் நடந்த சண்டை, அவர்களின் கணவன்மார்கள் இருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு இறந்து போகும் நிலைமையில் முடிந்து விட்டது. இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.
அமெரிக்காவில் இன்று Black Friday. பொதுவாக Thanksgiving Day-க்கு அடுத்த நாள் அமெரிக்காவில் அனைத்து கடைகளிலும் தள்ளுபடி கொடுப்பார்கள். நம் ஊர் ஆடி தள்ளுபடி போல. பெரும்பாலான கடைகள் இன்று அதிக லாபம் சம்பாதிப்பதால் இன்றைய தினத்துக்கு "கறுப்பு வெள்ளிக்கிழமை" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவரை சிவப்பாக இருந்த (நஷ்டத்துடன் இருந்த) கடைகளின் Balance Sheet இன்று கறுப்பாக மாறுவதால் (லாபமுடன் இருப்பதால்) வந்த பெயர் "கறுப்பு வெள்ளிக்கிழமை".
நியூயார்க் Long Island வால் மார்ட் கடையில் வேலை பார்த்த Jdimytai Damour குடும்பத்துக்கு இன்றைய தினம் உண்மையிலேயே ஒரு கறுப்பு வெள்ளிக்கிழமை. தள்ளுபடியை நாடி வால் மார்ட் கடையில் கூடிய ஜனத்திரள் அவரின் உயிரை எடுத்துவிட்டது. அது பற்றிய முழு விபரங்கள் இங்கே.
ஒரு உயிர் போன பிறகும், "கடையை மூடக்கூடாது. கால் கடுக்க பல மணி நேரம் காத்திருந்தோம், ஷாப்பிங் செய்தே தீருவோம்" என்று சிலர் விவாதம் செய்திருக்கிறார்கள். மனித நேயமே, நீ எங்கே போய்விட்டாய்?
தொடர்புள்ள இணைப்பு: கடைகளின் நெரிசலில் கஷ்டப்படாமல், வலைத்தளங்களில் மலிவாக பொருட்களை வாங்கலாம்
Friday, November 28, 2008
பொம்மை கடைக்குள் ஒரு துப்பாக்கி
Thursday, November 27, 2008
கூகுளில் தமிழ் விளம்பரம்
தமிழை கொலை செய்து கூகுளில் ஒரு விளம்பரம் வந்தது.
விளம்பரத்தை எழுதியவர்களுக்கு தமிழ் தெரியாதா அல்லது கூகுள் செய்த குழப்பமா என்று தெரியவில்லை.
Sponsored Link: இந்தியாவில் திரும்பவும் போலியோ தலை தூக்குகின்றதா?
பொருளாதார சரிவை சமாளிப்பது எப்படி?
1920-களில் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து கற்றுக்கொண்ட சில பாடங்களை வைத்து மின்ட் வலைத்தளத்தில் நல்ல பதிவை பிரசுரித்திருக்கிறார்கள். அவை தவிர இன்னும் சில நல்ல விஷயங்கள்:
1. பொருட்களை வாங்கும் போது முடிந்த வரை டெபிட் கார்டு அல்லது பணத்தை உபயோகியுங்கள். கிரடிட் கார்டுகளை கொஞ்சம் நாள் தள்ளி வைக்கலாம்.
2. உங்களிடம் மூன்றுக்கு மேலான கிரடிட் கார்டுகள் இருந்தால், உபரியாக உள்ள கார்டுகளை கேன்சல் செய்து விட்டால் நலம். கையில் நிறைய கார்டுகள் இருந்தால் செலவை கட்டுப்படுத்துவது கடினம். 
3. பல மாதங்களாக உங்கள் கண்களை உறுத்திக்கொண்டிருந்த 60" எல்.சி.டி. டி.வி-யை இப்போது வாங்காமல் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.
4. உங்கள் வீட்டுக்கடன்களின் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பிருக்கிறதா (refinance) என்று உங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அமெரிக்காவில் பல வங்கிகள் தங்களிடன் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு உதவி செய்வதாக அரசாங்கத்திடம் சத்தியம் செய்திருக்கின்றன. இது பற்றிய தொடர்புள்ள பதிவு இங்கே.
5. நீங்கள் பார்க்கும் வேலை பிடிக்காமல் இருந்தாலும், ஒரு முட்டாள் மேனேஜரிடம் வேலை பார்க்கும் துரதிர்ஷ்டம் இருந்தாலும், வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு வேறு வழி இல்லை. உலக முழுதும் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனா போன்ற நாடுகளிலும் பொருளாதார சரிவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
Sunday, November 23, 2008
சிட்டி பேங்கின் சிக்கல்கள்
செப்டம்பர் 15, 2008 அன்று சிட்டி பேங்கும் கீழே விழலாம் என்று எழுதியிருந்தேன். அந்த நேரம் வந்து விட்டது போல தெரிகிறது. சமீப காலமாக சிட்டி பேங்கின் பங்கு விலை பலத்த அடி வாங்கி இப்போது மிக குறைந்த விலையில் விற்கிறது. 
பொருளாதாரம் இப்போது இருக்கும் நிலைமையில் சிட்டி பேங்க் திவாலானால் உலக பொருளாதாரம் இன்னும் சிக்கலில் மாட்டித்தவிக்கும் என்பதால் அமெரிக்க அரசாங்கம் சிட்டி பேங்க்கை காப்பாற்றுவதற்கான வழிகளை ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. முழு விபரங்கள் நாளை காலை வெளி வரலாம்.
தொடர்புள்ள பதிவுகள்: அரசாங்கத்தின் உதவி | விக்ரம் பண்டிட்
Update at 5:15am PST on Nov 24: சிட்டி பேங்க் காப்பாற்றப்பட்டது
Wednesday, November 19, 2008
கிரடிட் கார்டு கடன்கள்
சமீப காலம் வரை பல இந்திய வங்கிகள் யார் கேட்டாலும் கிரடிட் கார்டுகள் கொடுத்தார்கள். இளைஞர் சமுதாயம் நாளைய தினத்தைப் பற்றி கவலைப்படாமல் கிரடிட் கார்டுகளை உபயோகித்து புத்தம் புதிய செல் போன்களை வாங்கியது. வருடத்துக்கு ஒரு முறை செல் போனை மாற்றுவது ஃபேஷனாகி விட்டது. கால் சென்டர் கலாசாரம் கிரடிட் கார்டுகளின் உபயோகம் அசுர வேகத்தில் இந்தியாவில் வளர விதையிட்டது.
இன்று அதே கிரடிட் கார்டு கலாசாரம் கார்டுகளை வாங்கியவர்களையும் கொடுத்தவர்களையும் பயமுறுத்துகிறது. இந்தியாவில் மூன்று கோடி கிரடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் ரூபாய்.56,000 கோடிக்கு கிரடிட் கார்டுகளின் மூலம் மக்கள் பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் தங்களுக்கு அதிக கமிஷன் கிடைத்ததால் சந்தோஷப்பட்ட வங்கிகள், தாங்கள் கொடுத்த கிரடிட் திரும்ப வராததால் நொந்து போயிருக்கின்றன.
இவ்வளவு நாட்கள் வேடிக்கை பார்த்துவிட்டு "வங்கிகள் தாறுமாறாக கிரடிட் கார்டுகள் கொடுத்து விட்டன" என்று பங்குசந்தை/பொருளாதார நிபுணர்கள் இப்போது வங்கிகளை குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியாவில் திரும்ப வராத கிரடிட் கார்டு கடனின் விகிதம் தற்போது 9%. இது 15%க்கு போகும் என்று Crisil கணித்திருக்கிறது.
மும்பையில் கிரடிட் கார்டு கடனால் கஷ்டப்பட்ட ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது. அவர்களின் சவத்துடன் 73 கிரடிட் கார்டுகள் கிடந்தது. இது பற்றிய விபரங்கள் இங்கே.
கிரடிட் கார்டு கடன்களிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு மும்பையில் உள்ள அபய் கிரடிட் கவுன்சிலிங் சென்டர் ஆலோசனை கொடுக்கிறது. அவர்களின் விளம்பரம் கீழே.
Sunday, November 09, 2008
குளியலறையில் கிடைத்த புதையல்
பாப் கிட்ஸ் கட்டிட கான்ட்ராக்டர். தன் தோழி அமந்தா சமீபத்தில் வாங்கிய வீட்டின் குளியலறை சுவர்களை மாற்றும் போது சுவர்களின் நடுவே 182,000 டாலர்கள் ஒளித்து வைத்திருப்பதை கண்டு பிடித்தார். 79 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது அந்த வீட்டு சொந்தக்காரர் வங்கியில் போட மனதில்லாமல், குளியலறையில் பாதுகாத்த பணம். 
அவ்வளவு பணத்தையும் தானே எடுத்துக் கொள்ளாமல் பாப் கிட்ஸ் நேர்மையுடன் தன் தோழியிடம் உண்மையை சொல்லியிருக்கிறார். அந்த பணத்தை எப்படி பிரிப்பது என்பதில் தகராறு ஆரம்பித்து இன்று அமந்தா வாங்கிய வீட்டின் ஒரிஜினல் சொந்தக்காரர் குடும்ப வாரிசுகளும் புதையலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.
சில சமயங்களில் நேர்மையாக நடந்து கொண்டாலும் பிரச்னை வரத்தான் செய்கிறது.
Thursday, November 06, 2008
ஓரின கலப்பு திருமணம் (Gay Marriage)
ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் என்பது என் கருத்து. ஆணும் ஆணும் கல்யாணம் செய்து கொள்வது சகிக்க முடியாத விஷயம். ஓரின சேர்க்கையை நாடுபவர்களின் மூளையில் நிச்சயமாக கோளாறு உண்டு என்று நம்புகிற ஆள் நான். என்னைப்போலவே கலிபோர்னியாவில் பலர் நினைத்ததால், Prop-8 என்ற சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பலர் வாக்களித்திருக்கிறார்கள்.
ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் திருமணங்களை தடை செய்ய வேண்டும் என்பது தான் Prop-8-ன் நோக்கம். நம் நாட்டில் இது போல சட்டங்களை அரசாங்கமே முடிவு செய்து அறிவிக்கும். அமெரிக்காவில் மக்களே இது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க முடியும். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தேர்தலில், கலிபோர்னியா மாநிலத்தில் Prop-8 மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று விட்டது.
ஒரு வேளை இந்த சட்ட திருத்தம் வெற்றி பெற்றால் நம்மால் கல்யாணம் செய்ய முடியாதோ என்று பீதியாகி இரு பெண்மணிகள் போன வாரமே கல்யாணம் செய்து கொண்டார்கள். இரு ஆண்களும் மோதிரம் மாட்டிக் கொண்டார்கள். இவர்கள் கல்யாணம் இப்போது செல்லுமா என்பது சந்தேகம்.

ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இரு பெண்மணிகள் தங்களது 7 வயது பேரனின் கையில் Prop-8 சட்ட திருத்தத்திற்கு எதிராக விளம்பர பலகை கொடுத்து நிற்க வைத்திருக்கிறார்கள். 
இன்னொரு பக்கம் Prop-8 சட்ட திருத்தத்திற்கு ஆதரவாளர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் தான் கல்யாணம் என்ற பாரம்பரியம் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறார்கள். இதற்கெல்லாம் கூட கடவுளை பிரார்த்தனை செய்ய வேண்டிய அளவுக்கு கலிகாலம் முற்றிப்போய்விட்டது.
Prop-8 சட்ட திருத்தம் வெற்றி பெற்றதால் ஓரின சேர்க்கையில் ஆர்வமுள்ள புள்ளிராஜா கண்ணீர் வடிக்கிறார்.
Prop-8 சட்ட திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் செல்ல சில லெஸ்பியன்கள் கூட்டம் கூடி ஆலோசிக்கிறார்கள். இவர்களை திருத்தவே முடியாது போலிருக்கிறது.
Monday, November 03, 2008
38,538 வேலை இழப்புகள்
கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களில் 38,538 ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். TechCrunch வலைப்பதிவில் இது பற்றிய முழு விபரங்கள் படிக்கலாம்.
இந்த வலைப்பதிவில் Layoffs-களை மானிட்டர் செய்வதற்கு தனி பக்கத்தையே பராமரிக்கிறார்கள். இந்த பக்கத்தை அடிக்கடி பார்த்தால், வேலை செய்வதற்கே மனது வராது.
Sunday, November 02, 2008
25 சதவிகித ஊழியர்களுக்கு வேலை இழப்பு?
அடுத்த ஒரு வாரத்தில் இந்தியாவில் சில நிறுவனங்களில் 25 சதவிகித ஊழியர்கள் வேலை இழக்கலாம் என்று ASSOCHAM (Associated Chambers of Commerce and Industry of India) கணித்திருக்கின்றது. முழு விபரங்கள் இங்கே.
தொடர்புள்ள இணைப்பு: இனி என்ன செய்யலாம்?
