சுருக்கமாக சொல்வதென்றால், Just hang in there! நேற்று நடந்தது உலகின் இறுதி கிடையாது. இன்று நடப்பது புது அத்தியாயமும் கிடையாது. இந்த கலாட்டா இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கும். தினமும் பங்கு விலைகளை பார்த்து டென்ஷனாகாமால் இருப்பது நல்லது. நீண்ட கால முதலீடு மட்டும் தான் நிம்மதியையும் நிதியையும் தரும்.
நேற்று ஏற்பட்ட மகாமக நெருக்கடியில் ஆப்பிள் பங்குகளை வாங்கினேன். இன்னும் விலை குறைந்தால் CSCO, MSFT, GOOG போன்ற பங்குகளை வாங்குவதாக இருக்கிறேன். நல்ல பங்குகள் எதுவும் நல்ல விலைக்கு கிடைக்காமல் இருந்தால், cash is king என்ற தாரக மந்திரத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பதும் நல்லது.
அதே சமயம், என் போர்ட்போலியோவில் இருந்து கழட்டி விட வேண்டிய பங்குகளின் விலை சிறிது உயர்ந்தவுடன் விற்று விட் போகிறேன்.
அமெரிக்காவில் வீட்டு விலைகள் இன்னும் குறையலாம்.
401k மறுபடியும் 101k-ஆக மாறலாம். உங்களின் 401k கணக்கில் உள்ள பரஸ்பர நிதிகளை மறுபரிசீலனை செய்வது நல்லது. உங்களின் பல நிதிகள் emerging markets போன்ற ஏரியாவில் இருந்தால், அவற்றில் சில நிதிகளை விற்று விடலாம். இந்தியா, பிரேசில் பங்கு சந்தைகள் இன்னும் விழலாம்.
இந்திய ரியல் எஸ்டேட் இன்னும் அசரவில்லை. உலகில் எந்த பகுதியில் என்ன நடந்தாலென்ன, நம் ஊரில வீட்டு விலை அதிகமாக குறையாது என்ற பலத்த நம்பிக்கை இருக்கிறது. கணிணி நிறுவனங்கள் பரவலாக layoff செய்ய ஆரம்பித்தால் இந்த நிலைமை ஒரே வாரத்தில் மாறும். அமெரிக்க நிறுவனங்களை மட்டும் நம்பி இந்திய IT நிறுவனங்கள் கிடையாது. ஆனாலும், அமெரிக்க பொருளாதார பாதிப்பு ஐரோப்பாவிலும் பிரதிபலிக்கின்றது. அந்த பாதிப்பு ரஷ்ய பங்கு சந்தையை மூட வைக்கின்றது. அமெரிக்காவில் பொருளாதாரம் இன்னும் மோசமடைந்தால் இந்திய கணிணி நிறுவனங்களை அது நேரடியாக பாதிக்கும். அவற்றின் billing rate குறைவதற்கு சாத்தியங்கள் அதிகம்.
அமெரிக்காவில் வங்கிகள் விழுந்தது போல இந்தியாவிலும் வங்கிகள் மறைந்து போகலாம். அப்படி விழும் வங்கிகளில் ICICI வங்கி முதலாக இருக்கலாம். பேராசையை விட பயம் அதிக சக்தி வாய்ந்தது. பங்கு சந்தையில் பயம் பரவ ஆரம்பித்தால் அமெரிக்க ஜனாதிபதியால் கூட அதை நிறுத்த முடியாது.
Tuesday, September 30, 2008
இனி என்ன செய்யலாம்?
Wednesday, September 24, 2008
இலவச கிரடிட் மானிட்டரிங் சேவை (Free credit monitoring service)
நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Credit monitoring service உங்களுக்கு இலவசமாக வேண்டுமா? இன்றே கடைசி நாள்! Transunion கம்பெனி மீது தொடுக்கப்பட்ட lawsuit-ன் பிரதிபலிப்பாக அந்த கம்பெனி கிரடிட் மானிட்டரிங் சேவையை ஒன்பது மாதங்களுக்கு இலவசமாக கொடுக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்.
Thursday, September 18, 2008
என்ன கொடுமை சார் இது?
அனைத்து MBA கல்லூரிகளிலும் campus placement-ல் Lehman Brothers-ல் வேலை கிடைத்தால் பெரிய விருந்து கொடுத்த காலம் இருந்தது, சில மாதங்கள் முன்பு வரை. 
இன்று அந்த நிறுவனத்தின் பங்கு Pink Sheet (over the counter) நிலைமைக்கு போய் விட்டது. வாழ்க்கை நமக்கு கொடுக்கும் பாடங்கள், சில நேரங்களில் மிக பிரமிப்பாக இருக்கிறது.
Monday, September 15, 2008
செப்டம்பர் 15, 2008


இந்த நாளைப்பற்றி வருங்கால சந்ததிகள் பேசும். கல்லூரிகளில் இந்த நாளில் நடந்த சம்பவங்கள் case study-ஆக விவாதிக்கப்படும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமி. ஊழல், லஞ்சம், தேவையில்லா தடங்கல்கள், அரசியல்வாதிகள் தலையீடு போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம். அரசாங்கம் கொடுக்கும் பூரண சுதந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்தியதால், அமெரிக்க பங்குச் சந்தைகளில் இன்று மீண்டும் ரத்த ஆறு.
இது இன்றோடு முடிய போவதில்லை. இன்னும் பல மாதங்கள் தொடரும். இன்னும் சில மாதங்களில் Wachovia, சிட்டி பேங்க் போன்ற வங்கிகள் கவிழலாம். மெரில் லிஞ்ச் போன்ற மிகப் பெரிய நிறுவனத்தை சொற்ப விலைக்கு வாங்கியதால் பேங்க் ஆப் அமெரிக்கா இன்று பூரித்துப்போய் இருக்கிறது. இந்த மெர்ஜர் ஒரு வகையில் நல்லது தான். ஆனாலும் பேங்க் ஆப் அமெரிக்கா போன்ற ரீடெய்ல் வங்கிகள் மெரில் லிஞ்ச் ஊழியர்களை கையாள முடியுமா என்பது கேள்விக்குறி.
சில மாதங்களுக்கு முன்னால் countrywide நிறுவனத்தை பேங்க் ஆப் அமெரிக்கா சொற்ப விலைக்கு வாங்கியது. அப்போது புத்திச்சாலித்தனமாக தெரிந்த மெர்ஜர் இன்று அவ்வளவு புத்திச்சாலித்தனமாக தெரியவில்லை. மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் internal politics மற்றும் அதீத கடன்களை பேங்க் ஆப் அமெரிக்கா எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த கலாட்டாவில் பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியும் lehman brothers போல திவாலானால் கூட ஆச்சரியப்பட மாட்டேன்.
இந்த financial chaos-ல் அதிக அடி படாமல் Goldman Sachs போன்ற நிறுவனங்கள் தான் மீண்டு வரும்.
தொடர்புள்ள இணைப்பு:
வங்கிகளுக்கு புதுவிதமான தலைவலி
Sunday, September 14, 2008
பங்கு சந்தை முதலீடு
ஹோம் ஸ்கூலிங்
Home schooling என்பதை பல பெற்றோர்கள் விரும்புகிறார்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் தான் அவர்களுக்கு social skills கிடைக்கும் என்பது என் கட்சி. ஆனாலும், சில அமெரிக்க பள்ளிகளில் நடக்கும் வன்முறைகளை பார்த்து பயந்து போய் வீட்டிலிருந்து படிப்பதே சிறந்தது என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். 
வாஷிங்க்டன் மாநிலத்தில் வசிக்கும், ஹோம் ஸ்கூலிங்கை விரும்பும் பெற்றோர்களுக்கு வாஷிங்டன் விர்ச்சுவல் அகாடமி பயனுள்ளதாக இருக்கும். அமெரிக்க பொது பள்ளிகளில் உள்ளதை போலவே கட்டணம் எதுவும் கிடையாது.
தொடர்புள்ள இணைப்புகள்:
http://www.homeschool.com/articles/Texas_Tech/default.asp
http://www.depts.ttu.edu/ode/
http://homeschooling.gomilpitas.com/
Monday, September 01, 2008
வங்கிகளுக்கு புதுவிதமான தலைவலி
நியூயார்க் நகரத்து வீதிகளில் நடந்து போகும் போது வானளாவிய வங்கி கட்டிடங்களை பார்த்து மலைத்து போயிருப்பீர்கள். “இவர்களிடம் இவ்வளவு பணமா!” என்று வியந்து போயிருக்கலாம். எல்லா பணமும் OPM (Other people’s money) தான். இந்த வங்கிகளில் பெரும்பாலானவை இப்போது வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தை எப்படி திரும்ப கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன. 
Sub-prime crisis கிட்டத்தட்ட Chaos theory போல கதை மாறிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சில வங்கிகள் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு, கடன்களை வாரி இறைத்தன. 2003-04 வருடங்களில் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களிடம் சில வங்கிகள் சம்பள ஆதாரங்களை கூட கேட்டதில்லை. “வீட்டு விலை இனிமேல் குறையவே குறையாது” என்ற ஞானோதயம் வந்ததனால் பல வங்கிகள் கண்களை மூடிக்கொண்டு கடன் கொடுத்தார்கள். அது சப்-பிரைம் பூதமாக உருமாறி பல வங்கிகள் திவாலாகி விட்டன. Lehman brothers போன்ற ஜாம்பவான்கள் கூட கவிழ்ந்து விட்டார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஒரு புதுவிதமான கடன் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று பல வங்கிகள் யோசித்துக் கொண்டிருக்கின்றன. பல வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் வாங்கி சில வாடிக்கையாளர்களிடம் கடன் கொடுத்து வட்டி வாங்குவது தான் வங்கிகளின் ஆதாரம். 2006-ல் floating rate notes என்ற பெயரில் வங்கிகள் வாங்கிய டெபாசிட்டுகள் இன்னும் சில மாதங்களில் mature ஆகின்றன. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். ஆனால் வங்கிகளிடம் போதுமான அளவுக்கு பணம் இல்லை.
இந்த மாதத்தில் மட்டுமே சில வங்கிகள் 95 பில்லியன் டாலர் floating rate notes-களுக்கான பணத்தை வாடிக்கையாளர்களிடம் திரும்ப கொடுக்க வேண்டும். 2009 கடைசிக்குள் கிட்டத்தட்ட 787 பில்லியன் டாலர்களை floating rate notes சம்பந்தமாக வங்கிகள் திரும்ப கொடுக்க வேண்டும். பானையில் இருந்தால் தானே சாதத்தை கொடுக்க முடியும். பானையின் கீழே பெரிதாக ஓட்டை போட்டவர்களே இன்று பானையில் ஒன்றுமில்லையென்று அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகளை திட்டுகிறார்கள்.
அமெரிக்காவில் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை இன்சூரன்ஸ் செய்யும் Federal Deposit Insurance Corp (FDIC) நிறுவனத்தின் கணிப்பின்படி 117 வங்கிகள் தாங்கள் வாங்கிய floating rate டெபாசிட்டுகளை திரும்ப கொடுக்க முடியாமல் போகலாம்.
உங்கள் வங்கி கணக்கில் $100,000க்கு மேல் பணம் இருந்தால் அதிகமாக உள்ள பணத்தை FDIC பாதுகாப்புள்ள வேறு வங்கிகளுக்கு மாற்றுங்கள். சில வங்கிகளில் ஒவ்வொரு அக்கவுண்டுக்கும் $100,000 வரை FDIC பாதுகாப்பு தரும். உதாரணமாக, நீங்கள் Wells Fargo வங்கியில் செக்கிங் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதற்கு $100,000 வரை FDIC பாதுகாப்பு உண்டு. அதே வங்கியில் CD அக்கவுண்டில் $100,000 வரை வைத்திருந்தால் அதற்கும் $100,000 வரை முழு பாதுகாப்பு உண்டு. மேலும் விபரங்களுக்கு FDIC வலைத்தளத்தை பார்க்கவும்.
இந்த பிரச்னை அமெரிக்காவோடு நிற்கவில்லை. ஐரோப்பிய நாடுகளிலும் இதன் தாக்கம் இருப்பதாக தகவல். இந்த வருட கடைசிக்குள் கோல்ட்மேன் சாக்ஸ், மெரில் லிஞ்ச், மார்கன் ஸ்டான்லி, வெல்ஸ் பார்கோ போன்ற பல வங்கிகள் floating rate டெபாசிட்டுக்கான பல பில்லியன் டாலர் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். இத்தாலியின் யுனிகிரடிட் வங்கிக்கும் இதே பிரச்னை.
Lehman brothers $60-லிருந்து $16-க்கு விழும் என்று போன வருடம் யாராவது சொல்லியிருந்தால் அவரை ஏளனமாக பார்த்திருப்பார்கள். அப்படிப்பட்ட super-duper நிறுவனமே இன்று தள்ளாடுகின்றது. நம் பணத்தை நாம் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

