…இந்தியா!
2006-07ல் அதிகமான மில்லியனர்களை இந்தியா உருவாக்கியுள்ளது. இதில் பெரும்பாலானோர் ரியல் எஸ்டேட்டில் பணத்தை அள்ளியிருப்பார்கள்.
Sunday, July 20, 2008
அதிகமான மில்லியனர்களை உருவாக்கிய நாடு…
Monday, July 14, 2008
தலைமை அதிகாரிகளுக்கும் வேட்டு
அமெரிக்க சப்-பிரைம் கடன் பிரச்னை யாரையும் விட்டு வைக்கவில்லை. தலைமை அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், கன்ட்ரோலர்கள் பலரும் வேலையை இழந்து விட்டார்கள். நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் மட்டுமல்லாது, நடுத்தட்டு மேலாளர்கள் பலர் வேலை இழந்து விட்டார்கள். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இன்னும் என்ன நடக்குமோ என்ற பீதி இருக்கிறது.
“பெரிய பெரிய ஆளெல்லாம் வீட்டுக்கு போய் விட்டார்கள், நமக்கு இன்னும் எத்தனை நாள் வேலையோ” என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. முக்கியமாக வங்கிகள் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களிடம். Techcareers தளத்தில் இது பற்றி நன்றாக எழுதியிருக்கிறார்கள். நீங்கள் நிதித்துறையில் பணிபுரிவராக இருந்தால் அவசியம் படிக்கவும்.
நீங்கள் வங்கி பங்குகளில் முதலீடு செய்திருந்தால் இன்னும் சில மாதங்களுக்கு roller coaster ride-ல் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.


தொடர்புள்ள பதிவு: Finance officers brace for worst of credit crunch
